ஆணையாம்பட்டி ஊராட்சி மன்ற துணை தலைவராக சுந்தரி தேர்வு

கெங்கவல்லி, ஜன.12: கெங்கவல்லி ஊராட்சி ஒன்றியம் ஆணையாம்பட்டி ஊராட்சியில், துணை தலைவர் பதவிக்கு 7வது வார்டு உறுப்பினரான சுந்தரி காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். வெற்றி பெற்ற சுந்தரிக்கு, கெங்கவல்லி வட்டார காங்கிரஸ் தலைவர் அருள், ஆணையாம்பட்டி ஊராட்சி திமுக ஒன்றிய குழு உறுப்பினர் கோமதி மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் சுப்பிரமணி, விஜயா, பூமல்லி, நதியா, அஞ்சலை ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து, கெங்கவல்லி வட்டார காங்கிரஸ் தலைவர் அருள் தலைமையில், சுந்தரி மற்றும் வார்டு உறுப்பினர்கள் சாவடி பகுதியில் இருந்து ஊர்வலமாக சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிதனர். நிகழ்ச்சியில், ஆணையாம்பட்டி ஊராட்சி திமுக செயலாளர் பெருமாள், இ.கம்யூனிஸ் மாவட்ட பொறுப்பாளர் சீனிவாசன், கிராம கமிட்டி தலைவர் மருதமுத்து, இந்திய ஜனநாயக கட்சி சுரேஷ், விடுதலை சிறுத்தை மற்றும் திமுக கூட்டணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: