தஞ்சை, டிச. 16: தஞ்சை அரசர் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு அரசு இலவசமாக வழங்கும் சைக்கிள்கள் மழையில் நனைந்து வருகிறது. இதை பாதுகாப்பாக வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழக அரசு சார்பில் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் அனைத்து பள்ளிகளில் உள்ள மாணவர்களை கணக்கெடுத்து அதற்கு ஏற்றார்போல் சைக்கிள்களின் உதிரி பாகங்களாக கொண்டு வந்து அதை பள்ளி வளாகத்தில் வைத்து தனியாக ஆட்களை கொண்டு பாகங்களை பொருத்தி வழங்குவர். இந்நிலையில் நடப்பாண்டில் படிக்கும் மாணவர்களுக்கு வழங்குவதற்காக இலவச சைக்கிள்கள் வந்துள்ளன. தஞ்சையில் உள்ள பெரும்பாலான பள்ளிகளுக்கு சைக்கிள்களின் உதிர பாகங்கள் வந்துள்ளன. அதை பொருத்தும் பணி நடந்து வருகிறது.