×

சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு அரிமளம் அரசு மருத்துவமனை வளாகத்தில் 2 மாதமாக எரியாத உயர் ேகாபுர மின்விளக்கால் நோயாளிகள் அவதி நடவடிக்கை எடுக்க கோரிக்கை

திருமயம்,டிச.16:அரிமளம் அரசு மருத்துவமனை வளாகத்தில் 2 மாதங்களாக எரியாமல் உள்ள உயர் கோபுர மின் விளக்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சுற்றுவட்டார பகுதியில் இருந்து தினந்தோறும் இரவு பகல் பாராமல் 100க்கும் மேற்பட்ட மக்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் இரவு நேரங்களில் மருத்துவ வளாகம் கும்மிருட்டாக இருப்பதால் நோயாளிகள், பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைந்து வந்தனர். இதனை கருத்தில் கொண்டு 10 மாதங்களுக்கு முன்னர் மருத்துவமனை வளாகத்தில் உயர் கோபுரமின் விளக்கு நிறுவப்பட்டது.

இதனால் அப்பகுதி இரவு நேரத்தில் கூட பகல் போல் இருந்ததால் பொதுமக்கள், நோயாளிகள் நிம்மதியடைந்தனர். இந்நிலையில் கடந்த 2 மாதங்களாக அரிமளம் மருத்துவமனை வளாகத்தில் இருந்த உயர் கோபுர மின்விளக்கு எரியாமல் உள்ளது. இதனால் மீண்டும் அப்பகுதியில் இருள் தொற்றி கொண்டதோடு நோயாளிகள் பெரும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அரிமளம் அரசு ஆரம்ப சுகாதார வளாகத்தில் உள்ள எரியாத உயர் கோபுர மின்விளக்கை சரி செய்ய உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.


Tags : Community activists ,government hospital premises ,Ariyalam ,
× RELATED ஆரணி அருகே அரையாளம் கிராமத்தில் வேளாங்கண்ணி மாதா சிலை உடைப்பு