×

கந்தா்வகோட்டையில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட இதுவரை 405 பேர் மனுதாக்கல்

கந்தா–்வகோட்டை, டிச.16: கந்தா–்வகோட்டை ஊராட்சியில் இதுவரை போட்டியிட 405 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர். இன்று கடைசி நாள் என்பதால் வேட்பு மனு கூடுதலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.36 கிராம ஊராட்சி தலைவா் பதவிக்கு இதுவரை 92 பேரும், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினா் பதவிக்கு 266 பேரும், ஒன்றியக் குழு வார்டு உறுப்பினா் பதவிக்கு 45 ேபரும் மாவட்ட ஊராட்சி குழு வார்டு உறுப்பினா் பதவிக்கு இரண்டு நபர்கள் வேட்பு மனுதாக்கல் செய்துள்ளனர்.அரசியல் கட்சியினா் தங்களது வேட்பாளா–்கள் பெயா்களை அறிவித்துள்ளனர். திமுக சார்பில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இடங்களை ஒதுக்கி அறிவித்துள்ளது.

அதே போல் அதிமுக கட்சியிலும் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. அமமுக தனது வேட்பாளா–்களை வேட்பு மனுதாக்கல் செய்ய செய்துள்ளது. இன்று பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுக வேட்பாளா–்கள் வேட்பு மனுதாக்கல் செய்ய உள்ளனா்.
இதில் தங்களுக்கு சீட் தரவில்லை என்று போட்டியாக வேட்பு மனுதாக்கல் செய்யவும் சிலர் தயாராக உள்ளனா். ஏற்கனவே வேட்பு மனுதாக்கல் செய்ய வருபவா–்களை கட்டுப்படுத்த இரண்டு இடங்களில் தடுப்பு ஏற்படுத்தி இருந்த போலீசார் இன்று அதிகமானோர் வேட்பு மனுதாக்கல் செய்ய வரவிருப்பதால் கூடுதலாக தடுப்புகளை ஏற்படுத்தி காவல் பணியில் ஈடுபட முடிவெடுத்துள்ளனா்.கடந்த 9ம் தேதி தொடங்கிய வேட்பு மனுதாக்கல் இன்றுடன் முடிவடைகிறது. 17ம் தேதி வேட்பு மனு பரிசீலனை நடைபெறவுள்ளது. 19ம் தேதி திரும்ப பெற கடைசி நாளாகும். அன்றே இறுதி கட்ட வேட்பாளர் பட்டியல் தயாராகும்.

Tags : elections ,government ,
× RELATED மக்களவை தேர்தலையொட்டி சிறப்பு...