×

முக்காணி பைக் விபத்தில் காயமடைந்த வாலிபர் சாவு

ஆறுமுகநேரி, டிச. 16:  திருச்செந்தூர் அடுத்த ஆலந்தலை தெற்குத்தெருவைச் சேர்ந்த பேட்ரிக் மகன் ஜேம்ஸ் (38). கப்பல் ஊழியராகப் பணியாற்றி வந்தார். இவரும், அதே பகுதியைச் சேர்ந்த இருதயராஜன் மகன் ஜோசப் என்பவரும் கடந்த 13ம் தேதி  இருசக்கர வாகனத்தில் ஆலந்தலையில் இருந்து தூத்துக்குடிக்கு சென்றுவிட்டு திரும்பிக்கொண்டிருந்தனர். பழையக்காயல் சிவன் கோயில் அருகே வந்தபோது பைக் பஞ்சரானது. இதனால் நிலைதடுமாறி பைக்கில் இருந்து கீழே விழுந்து படுகாயமடைந்த ஜேம்ஸ் உள்ளிட்ட இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் 1 மணியளவில் ஜேம்ஸ் இறந்தார். விபத்து குறித்து ஆத்தூர் போலீசார்  விசாரணை நடத்திவருகின்றனர்.  இறந்துபோன ஜேமஸ்க்கு மினோலா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.


Tags : accident ,
× RELATED அமெரிக்கா பால்டிமோர் பால விபத்தில் 6 தொழிலாளர்கள் பலி!