30 நிமிடங்களில் 4 ஆயிரம் யோகாசனம்

கோவில்பட்டி, டிச. 16:  கோவில்பட்டியில் கிரரேன்  கிட்ஸ் பள்ளி சார்பில்  யோகாசனம் நிகழ்ச்சி நடந்தது.யோகீஸ்வரர் சமுதாயத் தலைவர்  ஆனந்த் தலைமை வகித்தார். வக்கீல் முருகானந்தம், சுவாமி விவேகானந்தா யோகா மற்றும் ஸ்கேட்டிங் கழக  நிறுவனர் சுரேஷ்குமார்  முன்னிலை வகித்தனர். கிரேன் கிட்ஸ் பள்ளி நிறுவனர் அமுதா வரவேற்றார்.  முத்தானந்தபுரம் சொரூபானந்த சுவாமிகள் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். யோகா பயிற்சியாளர்  மாரியம்மாள், சென்னை பிரபாகரன், வேல்முருகன்  வாழ்த்திப் பேசினர்.

 சுவாமி  விவேகானந்தா யோகா மற்றும் ஸ்கேட்டிங் கழக மாநில ஆலோசகர் ராஜகோபால் யோகாசன  நிகழ்ச்சியைத் துவக்கிவைத்தார். இதையடுத்து 65 வயது முதியவரான  பழனி  என்பவர், உடல்நலனை பேணிக்காக்க வலியுறுத்தி 30 நிமிடங்களில் இடைவிடாது 4  ஆயிரம் யோகாசனங்கள் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதை பார்வையிட்ட பொதுமக்கள் அனைவரும் பாராட்டினர்.

Related Stories: