×

சின்னமனூரில் மஞ்சள் பூசிய நெல்வயல்கள்

சின்னமனூர், டிச.16: சின்னமனூர் பகுதியில் முதல் போகத்தில் விளைந்துள்ள நெற்கதிர்கள் பொன்னிறமாக மாறியுள்ளதால் ஊரே மஞ்சள் நிறமாக காட்சியளிக்கிறது.சின்னமனூரில் முல்லைப் பெரியாற்று பாசனத்தில் நான்காயிரம் ஏக்கர் வயல் வெளிகளில் முதல் போகத்திற்காக நெல் நடவு செய்யப்பட்டுள்ளது. இன்னும் ஒருவாரத்தில் அறுவடை செய்யும் வகையில் நெல் தயாராக உள்ளது.நடவில் துவங்கி நெல் வளர்ச்சி கொண்டிருந்தபோது கம்பம் பள்ளத்தாக்கு முழுவதுமே பசுமை போர்வை போர்த்தியது போல் காட்சியளித்தது. நெற்கதிர்களாக மாறி அறுவடைக்கு நெருங்கும் நிலையில் பொன்னிறமாக மாறி எங்கு பார்த்தாலும் மஞ்சள் கலராக மின்னிக்கொண்டிருக்கிறது.அறுவடையும் நெருங்கியுள்ளதால் விவசாயிகளும் அதற்கான ஏற்பாடுகளை விரமாக கவனித்து ஆயுத்தமாகி வருகின்றனர். அறுவடையும் வருவதால் மொத்த வியாபாரிகளும் கொள்முதல் செய்வதற்காக விவசாயிகளை வட்டமடித்து வருகின்றனர்.

Tags : paddy fields ,Chinnamanur ,
× RELATED வாகனம் மோதி எலட்ரீசியன் பலி