பழநி அருகே கற்பகத்தாழ்வார் சன்னதி கும்பாபிஷேகம் ஏராளமானோர் பங்கேற்பு

பழநி, டிச. 16: பழநி அருகே ராமநாதன்நகரில் உள்ள கற்பகத்தாழ்வார் சன்னதி கும்பாபிஷேக விழாவில் ஏராளமானோர் பங்கேற்றனர்.பழநி புறநகர், சிவகிரிப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட ராமநாதன்நகரில் காரியசித்தி லட்சுமி நரசிம்மர் கோயில் உள்ளது. இங்கு கற்பகத்தாழ்வார் சன்னதி கட்டப்பட்டது. இச்சன்னதியின் கும்பாபிஷேக நிகழ்ச்சி நேற்று நடந்தது. நேற்று முன்தினம் முதல் புண்ணிய நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தம் உள்ள கலசத்தை வைத்து யாகவேள்வி, அங்குரார்ப்பணம், பூர்ணாகுதி உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தது.இதனைத்தொடர்ந்து கலசநீர் கொண்டு நேற்று காலை கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தையொட்டி கற்பகத்தாழ்வாருக்கு கண் திறத்தல் நிகழ்ச்சி மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து அன்னதானம் மற்றும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டன. விழாவிற்கான ஏற்பாடுகளை ராமநாதன் குடும்பத்தினர் செய்திருந்தனர்.

Related Stories: