காட்சி பொருளான சிக்னல்கள் பழநியில் போக்குவரத்து நெரிசல்

பழநி, டிச. 16: பழநி பகுதியில் காட்சி பொருளாக இருக்கும் சிக்னல்களால் விபத்து அபாயம் மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.பழநி நகரில் முருகன் கோயில் இருப்பதால் நாள்தோறும் ஏராளமான வாகனங்களில் பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் வந்து செல்கின்றனர். மேலும் சுற்றுப்புற கிராமங்களில் இருந்தும் ஏராளமான வாகனங்கள் பழநி நகருக்கு வந்து செல்கின்றன. இதனால் பழநி நகரில் போக்கவரத்து நெரிசல் அதிகளவில் ஏற்படுகிறது. இதனைத் தவிர்க்க முக்கிய சாலைகளான பேருந்து நிலைய சாலை சந்திப்பு, மார்க்கெட் சாலை சந்திப்பு, ரணகாளியம்மன் கோயில் சந்திப்பு ஆகிய இடங்களில் சிக்னல்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.ஆனால் இந்த சிக்னல்கள் எதுவுமே தற்போது செயல்படாமல் உள்ளது. இதனால் அனைத்து சாலை சந்திப்புகளிலும் காலை மற்றும் மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் உண்டாகிறது.

பல இடங்களில் வாகனங்கள் ஒன்றோடொன்று மோதி விபத்தும் ஏற்படுவது வாடிக்கையான ஒன்றாகி விட்டது. இதுபோல் போதிய போக்குவரத்து போக்குவரத்து போலீசார் இல்லாததால் போக்குவரத்தை ஒழுங்கு படுத்தும் பணியில் ஈடுபடுவதிலும் சிரமம் உண்டாகிறது. பல நாட்களாக செயல்படாமல் இருக்கும் சிக்னல்கள் குறித்து மக்கள் எழுச்சி பேரவை நிர்வாகி நாகுஜியிடம் கேட்டபோது கூறியதாவது:சிக்னல்கள் அமைக்கப்பட்டு நீண்ட நாட்கள் ஆகிவிட்டது. இடைபட்ட நேரத்தில் சிறது காலம் பயன்பாட்டில் இருந்து வந்தது. பின், சரிவர பயன்பாட்டிற்கு வரவில்லை. போதிய போலீசார் இல்லாததால் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதிலும் சிரமம் உண்டாகிறது. ரெணகாளியம்மன் கோயில் பகுதியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த திருவிழா காலங்களில் கோவை, பொள்ளாச்சி, உடுமலை ஊர்களிலிருந்து வரும் பேருந்துகள் ஓம்சண்முகா தியேட்டர் இட்டேரி சாலையின் வழியாக செல்லும் வகையில் ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டிருந்தது.ஆனால், தற்போது இத்திட்டமும் கைவிடப்பட்டு விட்டது. இதனால் ரெணகாளியம்மன் கோயில் நால்ரோடு எப்போதும் போக்குவரத்து பாதிக்கும் சாலையாக மாறிவிட்டது. எனவே, நிரந்தரமாக ஒருவழிப்பாதை முறையிலேயே பஸ் நிலையத்தை அடையுமாறு போக்குவரத்தில் மாற்றம் செய்ய போலீசார் முன்வர வேண்டும். இவ்வாறு கூறினார்.

Related Stories: