பழநி, டிச. 16: பழநி காந்தி மார்க்கெட்டில் பிளாட்பாரங்களை வியாபாரிகள் ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்துள்ளனர்.பழநி காந்தி மார்க்கெட் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதி. இந்த மார்க்கெட் சாலையின் இரு புறமும் சுமர் 300க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இக்கடைகளின் ஒரம் பொதுமக்கள் நடந்து செல்ல நகராட்சி சார்பில் நடைபாதை மேடை அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்நடைபாதைகள் பெரும்பாலும் கடைக்காரர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. மேலும், இதில் தேங்காய், கீரை மற்றும் பழ வகைகளை விற்பனை செய்து கொள்ள சிறு வியாபாரிகளுக்கு, கடைக்காரர்கள் உள்வாடகை வசூலித்து வருகின்றனர்.இதனால் காந்தி மார்க்கெட்டிற்கு வரும் பொதுமக்கள் அனைவரும் தற்போது சாலைகளிலேயே நடந்து சென்று வருகின்றனர். இதுபோல் போக்குவரத்து காவல்த்துறை மார்க்கெட்டிற்கு வரும் இருசக்கர வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தடுக்க பிளாட்பராரத்தை ஒட்டி இரு சக்கர வாகனங்கள் நிற்கும் வகையில் வெள்ளை கோடு போட்டு அடையாளப்படுத்தி காட்டப்பட்டுள்ளது.