அண்ணாநகர்: சென்னை முகப்பேர், பன்னீர் நகரை சேர்ந்தவர் ஹரிதாஸ் (54). கடல்வாழ் உணவு பொருட்களை ஏற்றுமதி செய்து வருகிறார். இவரது நிறுவனத்தில் 300க்கும் மேற்பட்டோர் வேலை செய்கின்றனர். இவரிடம், ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ஹேமந்த்குமார் (28) என்பவர், கடந்த 8 மாதமாக டிரைவராகவும், வீட்டு வேலைகளையும் செய்து வந்துள்ளார். இந்நிலையில், ஹரிதாஸ் வேலை விஷயமாக வெளியூர் சென்றுவிட்டு நேற்று முன்தினம் இரவு வீடு திரும்பியுள்ளார். அப்போது, வீட்டுக்குள் பீரோ திறந்து இருப்பதையும், அதில் வைத்திருந்த ₹2.75 லட்சம் மாயமானதையும் கண்டு திடுக்கிட்டார்.