சென்னை: குப்பை கழிவுகளை தரம் பிரித்து வழங்குவது தொடர்பாக மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளிகளில் பயிற்சி வழங்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் நாள்தோறும் சுமார் 5000 மெட்ரிக் டன் அளவிலான குப்பை மாநகராட்சி துப்புரவு ஊழியர்களால் சேகரிக்கப்படுகிறது. இந்த குப்பை கழிவுகள் மறுசுழற்சி செய்யப்படுகிறது. குறிப்பாக உரம் தயாரிக்கும் முறை, உயிரி இயற்கை எரிவாயு தயாரிப்பு மையம், மரக்கழிவுகள் மற்றும் தேங்காய் ஓடுகளை மறுசுழற்சி செய்ய சிறப்பு மையம், பைராலிஸ் முறையில் எரியூட்டும் மையம் ஆகிவை மூலம் மறுசுழற்சி செய்யப்படுகிறது. மாநகராட்சி ஊழியர்கள் குப்பை சேகிரிக்க செல்லும்போது 60 சதவீதம் பேர் மட்டுமே குப்பைைய தரம் பிரித்து வழங்குகின்றனர். எனவே, குப்பை மறுசுழற்சி செய்துவது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த சென்னை மாநகராட்சி பல்வேறு பணிகளை செய்துவருகிறது. அதன்படி, குப்பையை தரம் பிரித்து வழங்குவது தொடர்பாக மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளிகளில் சிறப்பு பயிற்சி அளிக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.