மெரினா கடலில் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கி 2 மாணவர்கள் மாயம்

சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கி மாயமான 2 மாணவர்களை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை நம்மாழ்வார்பேட்டையை சேர்ந்தவர் ஜெயந்த் (15). அதே பகுதியில் உள்ள பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று விடுமுறை நாள் என்பதால், இவர் அதே பகுதியை சேர்ந்த நண்பர் சாய்குமார், மேலும் 4 பேருடன் மெரினா கடற்கரை சென்றார். அங்கு சிலர் கடலில் இறங்கி குளிப்பதை பார்த்ததும் 6 பேரும் கடலில் இறங்கி குளிக்க முடிவு செய்தனர்.

கடலில் இறங்கி குளிக்க ஆரம்பித்த சில நிமிடங்களில், ராட்சத அலையில் சிக்கி ஜெயந்த், சாய்குமார் மாயமாகினர். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த சக மாணவர்கள், அலறி கூச்சலிட்டனர். இதுதொடர்பாக அங்கிருந்தவர்கள் மெரினா கடற்கரை காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனர். அதைத்தொடர்ந்து  போலீசார், கடலோர காவல்படையினர், மீனவர்களின் உதவியுடன் படகுகளில் சென்று மாயமான மாணவர்கள் இரண்டு பேரையும் தேடி வருகின்றனர்.

Related Stories: