பூவார் பேரூராட்சியில் பொது மருத்துவ முகாம்

லால்குடி, டிச.13: லால்குடி அருகே பூவார் பேரூராட்சியில் பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பயன் பெற்றனர். லால்குடி அடுத்த வார்பேரூராட்சி மற்றும் புதூர்உத்தமனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து பொது மருத்துவ முகாம் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. பூவார் பேரூராட்சி செயல் அலுவலர் ஜவஹர் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். டாக்டர் பாலகுமார் தலைமையில் மருத்துவ குழுவினர் பொதுமக்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து மருந்து மாத்திரைகள் வழங்கினர். தொடர்ந்து நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. சுகாதார ஆய்வாளர் பிரகாஷ், பேரூராட்சி சுகாதார மேற்பார்வையாளர் நாகராஜன் மற்றும் பரப்புரையாளர்கள், பணியாளர்கள் கலந்துகொண்டனர். இதில் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்று பரிசோதனை செய்துகொண்டனர்.

Related Stories: