×

டிரைவர் மாயம்

திருச்சி, டிச. 13: திருச்சி சங்கிலியாண்டபுரம் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் செல்வம்(28). இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இவர் காந்தி மார்க்கெட்டில் உள்ள ஒரு பழக்கடையில் டிரைவராக வேலை செய்து வந்தார். கடந்த 6ம் தேதி வேலைக்கு சென்றவர் மீண்டும் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. இது தொடர்பாக பாலக்கரை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து டிரைவர் கடத்தப்பட்டாரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED திமுக கூட்டணிக்கு ஆதரவு