×

விஷம் குடித்து பெண் தற்கொலை

பேரையூர், டிச. 13: பேரையூர் அருகே குடும்ப பிரச்சனையால் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். மதுரை மாவட்டம், பேரையூர் அருகேயுள்ளது சந்தையூர். இந்த ஊரைச்சேர்ந்த சோலைமலை மனைவி சுந்தரம்மாள்(40). இவர் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இவரது தோட்டத்தில் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து விட்டார். மயங்கிய நிலையில் கிடந்த சுந்தரம்மாளை மீட்டு பேரையூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுவந்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர் சுந்தரம்மாள் ஏற்கனவே இறந்து விட்டார் எனக்கூறினார். அவரது உடல் உசிலம்பட்டி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. சம்பவம் குறித்து பேரையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.

Tags : suicide ,
× RELATED தெலங்கானாவில் மேலும் 2 விவசாயிகள் தற்கொலை