சாத்தூர், டிச.13: சாத்தூர் மிளகாய் வத்தல் வியாபாரிகள் மண்டபத்தில் வைத்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் பாரதியார் பிறந்த நாள் விழா நடைபெற்றது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க சாத்தூர் கிளைத் தலைவர் ப்ரியா கார்த்திக் தலைமை வகித்தார். கிளைச்செயலாளர் விஸ்வநாத் வரவேற்றார். நிகழ்ச்சியில் தமுஎகச மாநில துணைத்தலைவர் ரோகினி மற்றும் எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் சிறப்புரையாற்றினர்.
இவ்விழாவில் தமிழ்நாடு எழுத்தாளர் முற்போக்கு சங்க நிர்வாகிகள், பள்ளி மாணவ, மாணவியர்கள் மற்றும் சாத்தூர் ரேட்டரி சங்கத்தினர், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். பாரதியார் கவிதை, பாடல்கள், கட்டுரைகள் தொடர்பான போட்டிகள் மாணவ, மாணவியர்கள் இடையே நடைபெற்றது. அதில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.திருவில்லிபுத்தூர்: திருவில்லிபுத்தூரில் உரத்த சிந்தனை வாசக எழுத்தாளர்கள் சங்கம், விசு கல்வி அறக்கட்டளை சார்பில் பாரதியார் பிறந்தநாள் தினவிழா நடந்தது.சிஎம்எஸ் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவிற்கு பள்ளி தாளாளர் எட்வின் கனகராஜ் தலைமை வகித்தார். தலைமையாசிரியர் ஜான் ஜெபராஜ் முன்னிலை வகித்தார். உரத்த சிந்தனை எழுத்தாளர் சங்க பொதுச்செயலாளர் உதயம்ராம் மற்றும் ராஜபாளையம் நகர்நல அலுவலர் டாக்டர் சரோஜா ஆகியோர் உரையாற்றினர்.