×

அருப்புக்கோட்டையில் வேட்புமனு தாக்கல்

அருப்புக்கோட்டை, டிச.13: அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி மன்ற தலைவர் பதவிகளுக்கு வேட்புமனு தாக்கல் நடைபெற்றது. விருதுநகர் மாவட்டத்தில், அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய பகுதிகளுக்கு 2ம் கட்டமாக வருகிற 30ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி கடந்த 9ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 15 ஒன்றிய கவுன்சிலர்கள், 2 மாவட்ட கவுன்சிலர்கள், 32 ஊராட்சி மன்றத்தலைவர்கள், 246 வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கு வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு மதிமுக சார்பில் 2 பேரும் சுயேட்சையாக 2 பேரும் மனு தாக்கல் செய்துள்ளனர். ஊராட்சி மன்றத்தலைவர் பதவிக்கு 41 பேரும், வார்டு உறுப்பினர் பதவிக்கு 66 பேரும் இதுவரை மனுதாக்கல் செய்துள்ளனர். செட்டிகுறிச்சி ஊராட்சி மன்றத்தலைவர் பதவிக்கு தொழில் அதிபர் கேவிகேஆர் பிரபாகரன் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

Tags : Aruppukkottai ,
× RELATED சகோதரிகளை கடத்தி கூட்டு பலாத்காரம்