×

சாலையில் உள்ளது பாலமா? பள்ளமா? தாமரைக்குளம் மக்கள் கேள்வி

பெரியகுளம், டிச.13: பெரியகுளம் அருகே தாமரைக்குளம் பேருராட்சி உள்ளது. இந்த பேருராட்சியில் 7 மற்றும் 8வது வார்டுகளில் 6 தரைப்பாலங்கள் கட்டப்பட்டன. அவை 5 ஆண்டுகளுக்கும் மேலாக உடைந்து சரி செய்யப்படாமல் உள்ளது. இந்த உடைந்த பாலத்தின் வழியாக இரவு நேரங்களில் டூவீலர்களில் செல்வோர், பள்ளி செல்லும் சிறு குழந்தைகள் தவறி விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். மேலும் இப்பகுதியில் உள்ள உடல்நலம் குன்றியவர்களை மருத்துவமனை கொண்டு செல்ல ஆம்புலன்ஸ், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் நோயாளிகளின் வீட்டருகே செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த பாலத்தை சீரமைக்க வலியுறுத்தி 5 ஆண்டுகளாக பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை என்று இப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். எனவே, பேரூராட்நி நிர்வாகம் உடனடியாக பாலத்தை சீர் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : bridge ,road ,Pallama ,
× RELATED கட்டி முடிக்கப்பட்ட 6 மாதத்தில்...