×

தேனி என்.எஸ் கல்லூரியில் பெண்கள் பாதுகாப்புக்கானவிழிப்புணர்வு நிகழ்ச்சி

தேனி, டிச. 13: தேனி அருகே வடபுதுப்பட்டியில் உள்ள தேனி நாடார் சரசுவதி கல்வியியல் கல்லூரியில் பெண்கள் பாதுகாப்புக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறைத் தலைவர் முருகன் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் ராஜமோகன், பொருளாளர் பழனியப்பன் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் பியூலாரஜினி வரவேற்றார். இதில் கல்லூரி செயலாளர் தில்லைக்கனி, கல்லூரி இணை செயலாளர் கனகராஜ், தேனி மகளிர் காவல்நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்திலகம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். அப்போது `காவலன் ஆப்’ என்ற தொழில்நுட்பம் மூலம் பெண்கள் தங்களை எப்படி பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்திலகம் பேசினார். கல்லூரியின் ஆங்கிலத்துறை பேராசிரியர் நிஷாபொன்னரசி நன்றி கூறினார்.

Tags : Theni NS College ,
× RELATED தேனி என்.எஸ் கல்லூரியில் போதைப் பொருள் விழிப்புணர்வு கருத்தரங்கம்