×

மேலசொக்கநாதபுரத்திற்குஅடிப்படை வசதி தேவை பொதுமக்கள் கோரிக்கை

போடி, டிச.13: போடி அருகே மேலசொக்கநாதபுரம் பேரூராட்சியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். மீனாட்சிபுரம் சாலையில் கீழசொக்கநாதபுரம் விலக்கில் அரசு புறம்போக்கு நிலத்தில் 50க்கும் மேற்பட்டோர் குடிசை போட்டு வாழ்கின்றனர். அரசு தரப்பில் ஆதிதிராவிட மக்களுக்கு இலவச பட்டா வழங்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் மின்சாரம்,குடிநீர்,கழிப்பிடம் வசதியின்றி மக்கள் பெரும் சிரமப்படுகின்றனர். மழைக்காலங்களில் வெள்ளம் இந்த காலனிக்குள் நுழைந்து பகுதியை குளமாக மாற்றி விடுகிறது. இலவச பட்டா கிடைத்தும் அரசு முறையாக தொகுப்பு வீடு கட்டிதராமல் இழுத்தடிப்பதால் மாவட்ட நிர்வாகத்திடமும், மேலசொக்கநாதபுரம் பேரூராட்சியிலும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
எனவே, காலனி மக்களின் அடிப்பைட வசதிகளை கலெக்டர் செய்து தரவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : facilities ,
× RELATED கிளாம்பாக்கத்தில் அனைத்து வசதிகளும்...