×

செந்தில் பப்ளிக் பள்ளியில் கிறிஸ்துமஸ் தினவிழா கொண்டாட்டம்

சேலம், டிச.13: சேலம் ஜாகீர் அம்மாபாளையத்தில் உள்ள செந்தில் பப்ளிக் பள்ளியில் கிறிஸ்துமஸ் தினவிழா கொண்டாடப்பட்டது.  நிகழ்ச்சிக்கு பள்ளி தலைவர் கந்தசாமி தலைமை வகித்தார். துணைத்தலைவர் மணிமேகலை கந்தசாமி, செயலாளர் தனசேகர் முன்னிலை வகித்தனர். தாளாளர் தீப்திதனசேகர், முதன்மை நிர்வாக அலுவலர் சுந்தரேசன், முதன்மை முதல்வர் சீனிவாசன், பள்ளி முதல்வர் மனோகரன், துணை முதல்வர் நளினி ஆகியோர் கலந்துகொண்டனர். தொடர்ந்து, பள்ளி செயலாளர் தனசேகர் செல்போனால் ஏற்படும் தீமைகள் குறித்தும், பெற்றோர்கள் குழந்தைகளுக்கு அதிக சுதந்திரம் கொடுப்பது தவறு என்பதைப் பற்றியும் பேசினார். நிகழ்ச்சியில், பாதிரியார் ராஜ் சிறப்பு விருந்தினாராக கலந்து கொண்டு அன்பின் முக்கியதுவத்தையும், குழந்தை வளர்ப்பு கலையை பற்றியும் பெற்றோர்களுக்கு கூறினார். தொடர்ந்து, குழந்தைகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடந்தது.

Tags : Christmas Celebration ,Senthil Public School ,
× RELATED வேளாங்கண்ணியில் சிறப்பு திருப்பலி...