ராசிபுரம்.டிச.13:ராசிபுரம் அருகே உள்ள ஆர்.புதுப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில், நேற்று காவலன் செயலி அறிமுக விழா நடந்தது. பள்ளியின் தலைமையாசிரியர் ஆன்ட்ரூஸ் தலைமை வகித்தார். பள்ளி முதுகலை ஆசிரியர் செளந்திரராஜன் வரவேற்றார். இதில் ராசிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் இந்திரா கலந்துகொண்டு, பள்ளி மாணவ, மாணவிகள் இடையே காவலன் செயலியின் பயன்பாடு மற்றும் பயன்படுத்தும் முறைகள் குறித்து மாணவிகளிடம் எடுத்துரைத்தார். மேலும், மாணவிகள் எப்போதும் விழிப்புணர்வுடன், பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அறிவுரைகளை வழங்கினார். இந்தநிகழ்ச்சியில் பள்ளியின் ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.