×

மாவட்ட கவுன்சிலர் பதவி திமுக வேட்பாளர் மனுதாக்கல்

பள்ளிபாளையம், டிச.13:  நாமக்கல் மாவட்ட ஊராட்சிக்குழுவின் 2வது வார்டு உறுப்பினர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிடும் ரேவதி சம்பத்குமார், பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று மனுத்தாக்கல் செய்தார்.
இவரது கணவர் சம்பத்குமார், பள்ளிபாளையம் ஒன்றிய திமுக மாணவரணி அமைப்பாளராக பொறுப்பு வகித்து வருகிறார். இவர், காடச்சநல்லூர் ஊராட்சி மன்றத்தின் துணைத்தலைவராக 5 ஆண்டுகாலம் பணியாற்றியுள்ளார். டிரான்ஸ்போர்ட் தொழிலில் ஈடுபட்டுள்ள சம்பத்குமாரின் தொழில் வளர்ச்சிக்கு ரேவதி உறுதுணையாக இருந்து வருகிறார். இந்நிலையில், நேற்று அவர், பள்ளிபாளையம் ஒன்றிய பொறுப்பாளர் யுவராஜ் மற்றும் கட்சி பிரமுகர்களுடன் வந்து மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் பதவிக்கு மனுத்தாக்கல் செய்தார்.

Tags : DMK ,Candidate ,
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மீனவ...