×

ராசிபுரம் பாவை வித்யாஷ்ரம் பள்ளியின் ஆண்டு விழா

ராசிபுரம்,  டிச. 13: ராசிபுரம் பாவை வித்யாஷ்ரம் பள்ளிகளின் ஆண்டு விழா, பாவை  பள்ளிகள் வளாகத்தில் அமைந்துள்ள விவேகானந்தா அரங்கில் நடைபெற்றது. விழாவிற்கு  சிறப்பு விருந்தினராக நாமக்கல் மாவட்ட எஸ்பி அருளரசு கலந்து கொண்டார்.  பாவை கல்வி நிறுவனங்களின் தாளாளர் மங்கை நடராஜன், குத்துவிளக்கேற்றி விழாவை  துவக்கி வைத்தார். இயக்குனர் (பள்ளிகள்) சதீஷ் வரவேற்று பேசினார். துணை  முதல்வர் ரோஹித் சதீஸ் ஆண்டறிக்கை வாசித்தார். பாவை கல்வி நிறுவனங்களின் தலைவர் ஆடிட்டர்  நடராஜன், விழாவுக்கு தலைமை வகித்து சிறப்புரையாற்றினார்.தொடர்ந்து கல்வியாண்டில் சாதனைகள் புரிந்தோருக்கு எஸ்பி அருளரசு, கல்வி நிறுவனங்களின் தலைவர் ஆடிட்டர்  நடராஜன், நிர்வாகத்தினர் பரிசுகளை  வழங்கி பாராட்டினர். விழாவையொட்டி  மாணவ, மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.விழாவில் பாவை  கல்வி நிறுவனங்களின் செயலாளர் பழனிவேல், இணைச் செயலாளர் பழனிவேல்,  இயக்குனர் (சேர்க்கை) செந்தில், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் முக்கிய  பிரமுகர்கள் கலந்து கொண்டனர். பாவை பள்ளி மாணவ, மாணவிகளின் தலைவர் ஜூனைத்  ரேஹன் நன்றி கூறினார்.

Tags : Rasipuram Paavai Vidyashram School ,
× RELATED வையப்பமலையில் பக்தர்கள் கிரிவலம்