×

கஞ்சா விற்ற 5 பேர் கைது

கிருஷ்ணகிரி, டிச.13:  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவலாக திருட்டுத்தனமாக கஞ்சா விற்பனை செய்வதாக மாவட்ட எஸ்.பி பண்டி கங்காதருக்கு வந்த ரகசிய தகவலின்படி, அவர்களை பிடிக்க எஸ்.பி. போலீசாருக்கு உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில், மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அதில் நேற்று ஒரே நாளில் மட்டும் வேப்பனபள்ளி பகுதியில் ஜெயம்மா (60), மரக்கா (55), ஓசூர் பகுதியில் வெங்கடேஷப்பா (52), நாகராஜ் (32), சரோஜிராம் (39) ஆகிய 5 பேர் அப்பகுதிகளில் திருட்டுத் தனமாக கஞ்சா விற்பனை செய்ததைக்கண்டு பிடித்து அவர்களை கைது செய்து 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Tags :
× RELATED சீதாராமர் திருக்கல்யாணம்