சூளகிரி, டிச.13: சூளகிரி அருகே காமன்தொட்டி பகுதியில் சூளகிரி -ஓசூர் சாலையில் டீ கடை ஒன்று செயல்பட்டு வருகிறது.நேற்று மாலை டீ மாஸ்டர் டீ போடுவதற்காக எரிவாயு அடுப்பை இயக்கினார். அப்போது திடீரென சிலிண்டரில் எரிவாயு கிசிந்து தீ பற்றி எரிந்தது. இதை கண்டு அங்கிருந்தவர்கள் சிலிண்டரை சாலையில் தள்ளிவிட்டனர். உடனடியாக மளமளவென பற்றி எரிந்த தீயை மணல் மற்றும் தண்ணீரால் அணைத்தனர். உடனடியாக சிலிண்டரில் பற்றி தீயை அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.