×

ரஜினிகாந்த் பிறந்த நாளையொட்டி துப்புரவு பணியாளர்களுக்கு சேலை

போச்சம்பள்ளி, டிச.13: நடிகர் ரஜினிகாந்த் பிறந்த நாளையொட்டி நேற்று போச்சம்பள்ளி ரஜினி மக்கள் மன்றம் சார்பில் மாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து துப்புரவு பணியாளர்களுக்கு சேலை மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. பர்கூர் ஒன்றிய இணை செயலாளர் நிசார் தலைமை தாங்கி துப்புரவு பணியாளர்களுக்கு சேலை வழங்கினார். நிகழ்ச்சியில் விவசாய அணி செயலாளர் அர்ச்சுணன், பேக்கரி ஜெயபால், நில அளவர் கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளைஞர் அணி ரியாஷ் வரவேற்றார். ஒன்றிய துணை செயலாளர் மார்கண்டன், பேக்கரி சசிகுமார், முனீர், தங்கபெரியசாமி, செந்தாமரைசெல்வன், பழனி, ராமு, முகமது,சேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Rajinikanth ,Birthday Party ,
× RELATED பழம்பெரும் நடிகரும், இயக்குனரும்,...