×

உள்ளாட்சி தேர்தலுக்கு 4வது நாளில் 591 பேர் மனு தாக்கல்

தர்மபுரி, டிச.13: தர்மபுரி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலையொட்டி நேற்று 4வது நாளாக 591பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.  தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் வரும் 27ம் தேதி மற்றும் 30ம் தேதி என இரண்டு கட்டங்களாக நடக்கிறது. வேட்புமனு தாக்கல் செய்ய 16ம் தேதி கடைசிநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. 17ம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்படுகிறது. 19ம் தேதி வேட்புமனுக்கள் வாபஸ் பெற கடைசி நாளாகும். வாக்கு எண்ணிக்கை வரும் ஜனவரி 2ம் தேதி நடக்கிறது. மாவட்ட ஒன்றிய குழு துணை தலைவர்களுக்கு மறைமுக தேர்தல் வரும் ஜனவரி 11ம் தேதி நடக்கிறது. கிராம ஊராட்சிகளுக்கு தேர்தல் முடிந்த பின்னர், பிப்ரவரி மாதம் நகராட்சி, பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடைபெறுவதாக, தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.  தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரி, நல்லம்பள்ளி, அரூர், கடத்தூர், பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய ஒன்றியங்களில் உள்ள உள்ளாட்சி பொறுப்புகளுக்கு முதற்கட்டமாகவும், பென்னாகரம், ஏரியூர், காரிமங்கலம், மொரப்பூர், பாலக்கோடு ஆகிய ஒன்றியங்களில் 2ம் கட்டமாகவும் உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. தர்மபுரி மாவட்டத்தில் 9ம் தேதி மற்றும் 10ம் தேதி மந்தமாகவும், 11ம் தேதி உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு பின்னர், பிற்பகலில் விறுவிறுப்பாகவும் வேட்பு மனு தாக்கல் நடந்தது. நேற்று 12ம் தேதி காலை முதல் வேட்பு மனு தாக்கல் சூடுபிடிக்க துவங்கியது. வேட்பாளர்கள் தங்களது ஆதரவாளர்களுடன் திரண்டு வந்து மனுக்களை தாக்கல் செய்யும் பணியில் ஆர்வமுடன் ஈடுபட்டனர்.
இந்நிலையில் நேற்று 4வது நாளாக மாவட்டம் முழுவதும், மாவட்ட ஊராட்சி உறுப்பினருக்கு ஒருவரும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினருக்கு 26 பேரும், ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 90 பேரும், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 474 பேருமாக, மொத்தம் 591 பேர் மனுத்தாக்கல் செய்தனர். நேற்று வரை மொத்தம் 1,186 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர்.

Tags : elections ,
× RELATED மக்களவை தேர்தலையொட்டி சிறப்பு...