×

தமிழ் கவிஞர் மன்ற முப்பெரும் விழா

தர்மபுரி, டிச.13: தர்மபுரியில் தமிழ் கவிஞர் மன்றம் சார்பில், புதிய பொறுப்பாளர்கள் பொறுப்பேற்கும் விழா, பாரதியார் பிறந்தநாள் விழா மற்றும் கம்போடியா நாட்டுக் கலை பண்பாட்டுத்துறை விருது பெற்ற பாவலர் மலர்வண்ணனுக்கு பாராட்டு விழா ஆகிய முப்பெரும் விழா நடந்தது. இந்த விழாவிற்கு நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் இளங்கோ தலைமை வகித்தார். தகடூர் புத்தக பேரவைத் தலைவர் சிசுபாலன் முன்னிலை வகித்தார். தர்மபுரி மாவட்ட தமிழ் கவிஞர் மன்ற செயலாளர் ராசகுமாரன் வரவேற்றார். இதையடுத்து, பாரதியாரின் உருவ படத்துக்கு மன்ற நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். விழாவில், தர்மபுரி மக்களவைத் தொகுதி முன்னாள் உறுப்பினர் டாக்டர் செந்தில் பேசினார்.

Tags : Tamil Poetry Forum ,
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா