×

மலேசியாவில் சாதித்த போலீசாருக்கு பாராட்டு

மதுரை, டிச.13: மலேசிய தடகள போட்டியில் வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்கள் வென்ற போலீஸ் ஏட்டுகளுக்கு போலீஸ் கமிஷனர் மற்றும் எஸ்பி பாராட்டு தெரிவித்தனர். மலேசியாவில் அமைந்துள்ள குசிங், சரவாக்கில் 21வது சர்வதேச மூத்தோர் தடகள போட்டிகள் கடந்த 2ம் தேதி முதல் 7ம் தேதி வரை நடைபெற்றது. இதில் மதுரை செல்லூர் காவல்நிலைய ஏட்டு சிதம்பரம் பங்கேற்று 110 மீட்டர் தடைதாண்டும் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டு 3ம் இடத்தை பிடித்து வெண்கலப்பதக்கம் பெற்றார். இவரை போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் நேரில் வரவழைத்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இதே மலேசிய தடகள போட்டியில் மதுரை ஆயுதப்படையில் பணியாற்றி வரும் ஏட்டுகள் சந்துரு, ராஜேஷ் ஆகியோர் 35 வயதிற்கு மேற்பட்டோருக்கான போட்டியில் கலந்து கொண்டனர். அதில் சந்துரு 400 மீட்டர் தொடர் ஓட்டப்பந்தயத்தில் 2ம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கமும், ராஜேஷ் ஈட்டி எறிதல் மற்றும் வட்டு எறிதல் ஆகிய போட்டிகளில் கலந்து கொண்டு 4ம் இடமும் பிடித்தனர். இவர்கள் இருவரையும் எஸ்பி மணிவண்ணன் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

Tags : Malaysia ,
× RELATED மலேசியாவில் கடற்படை ஒத்திகையின்போது...