டாஸ்மாக்கில் திருடிய நான்கு பேர் கைது

சோழவந்தான், டிச.13: சோழவந்தான் அருகே டாஸ்மாக் கடையில் மது பாட்டில் திருடப்பட்ட சம்பவத்தில் 4 பேரை போலீசார் கைது செய்தனர். சோழவந்தான் அருகே அய்யப்பநாயக்கன்பட்டியில் டாஸ்மாக் கடை உள்ளது. இங்கு கடந்த அக்டோபர் மாதம் ஜன்னலை உடைத்து ரூ.75 ஆயிரம் மதிப்பிலான மதுபாட்டில்களை மர்மநபர்கள் திருடி சென்றனர்.  இதுகுறித்து சோழவந்தான் இன்ஸ்பெக்டர் பாலாஜி தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இது தொடர்பாக நேற்று  மதுரை அருள்தாஸ்புரம் ஜெயக்குமார் என்ற சேக் (24), நீதிராஜன் என்ற காசி(22), காடுபட்டி வினீத் (24), ராம்குமார் என்ற மாலிக்  (24) ஆகிய நால்வரை  கைது செய்தனர்.

Related Stories: