×

ஜான் பாண்டியன் வேண்டுகோள் சாய்பாபா கோயில் கும்பாபிஷேகம்

மதுரை, டிச.13: மதுரை ஒத்தக்கடை நரசிங்கத்தில் உள்ள சாய்பாபா கோயிலில் நாளை கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. மதுரை ஒத்தக்கடை நரசிங்கம் பகுதியில் உள்ள ஸ்ரீ யோக தரிசன சீரடி சாய்பாபா கோயிலில் நாளை கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. இதையொட்டி நேற்று காலையில் யாகசாலை பூஜை துவங்கி நடந்து வருகிறது. சாய்பாபாவுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நாளை காலை 7 மணி முதல் 9.30 மணிக்குள் மேளதாளம் முழங்க, வேதமந்திரங்கள் முழங்க, புண்ணிய நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரை கோபுர கலசங்கள் மீது ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதனைத்தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை கோயில் மேனேஜிங் டிரஸ்டி ராமச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

Tags : Sai Baba Temple ,
× RELATED திண்டுக்கல் சாய்பாபா ஆலயத்தில் அன்னதானம் வழங்கல்