ஆன்மிக மலர் விமான நிலையத்திற்கு மீனாட்சியம்மன் பெயர்

மதுரை, டிச.13: மதுரை விமான நிலையத்திற்கு மீனாட்சியம்மன் பெயரை சூட்ட வேண்டும் என தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியன் நேற்று மதுரை போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாத்தை சந்தித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, ‘‘போலீஸ் கமிஷனரை எனது சொந்த வேலையின் காரணமாக சந்தித்துவிட்டு வந்தேன். உள்ளாட்சி தேர்தலில் சட்டம் ஒழுங்கை கண்காணித்து அரசு பலத்த பாதுகாப்பு வழங்க வேண்டும்.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் ஆணவ கொலைகள் அதிகரித்து வரும் நிலையில் அதனை தடுக்க புதிய சட்டம் நிறைவேற்ற வேண்டும். சாதிய ரீதியான பிரச்னைகளை தவிர்க்க மதுரை விமான நிலையத்திற்கு மீனாட்சியம்மன் பெயரை சூட்ட வேண்டும். உள்ளாட்சி தேர்தல் கூட்டணி குறித்து அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. நமக்கான உரிமையை மீட்கும் குடியுரிமை மசோதாவிற்கு அதிமுக ஆதரவளித்தது வரவேற்கத்தக்கது’’ என்றார்.

Related Stories: