மதுரை, டிச.13: மதுரை விமான நிலையத்திற்கு மீனாட்சியம்மன் பெயரை சூட்ட வேண்டும் என தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியன் நேற்று மதுரை போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாத்தை சந்தித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, ‘‘போலீஸ் கமிஷனரை எனது சொந்த வேலையின் காரணமாக சந்தித்துவிட்டு வந்தேன். உள்ளாட்சி தேர்தலில் சட்டம் ஒழுங்கை கண்காணித்து அரசு பலத்த பாதுகாப்பு வழங்க வேண்டும்.