பறவைகள் படையெடுக்கும் விஷம் குடித்து பெண் தற்கொலை

பேரையூர், டிச.13: பேரையூர் அருகே குடும்ப பிரச்சனையில் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். மதுரை மாவட்டம், பேரையூர் அருகே சந்தையூரை சேர்ந்தவர் சோலைமலை மனைவி சுந்தரம்மாள்(40). இவர் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக தோட்டத்தில் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து விட்டார். மயங்கியநிலையில் கிடந்த சுந்தரம்மாளை மீட்டு ஆட்டோவில் பேரையூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுவந்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டார் எனக்கூறினார். அவரது உடல் உசிலம்பட்டி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. இது குறித்து பேரையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: