வாலிபர் குத்திக்கொலை கண்மாயில் உடல் வீச்சு

வாடிப்பட்டி, டிச.13: வாடிபட்டி அருகே வாலிபர் குத்தி கொலை செய்யப்பட்டார். வாடிப்பட்டி அருகே ராமநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் தொத்தன் மகன் பாண்டி(23). இவர் ஏற்கனவே சில குற்ற வழக்குகளில் தொடர்புடையவர் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு மர்மநபர்கள் பாண்டியை கத்தியால் குத்தி கொலை செய்து உடலை வாடிப்பட்டி தர்மராஜன்கோட்டை பாலதண்டாயுதபாணி கோவில் அருகேயுள்ள கண்மாய்கரையில் வீசிச் சென்றுள்ளனர். இது தொடர்பாக வாடிப்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற போலிசார்  உடலைக் கைப்பற்றி  விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் வாடிப்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: