×

நத்தம் வேம்பரளி பள்ளியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

நத்தம், டிச. 13: நத்தம் அருகே வேம்பரளியில் உள்ள பெனியேல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. பள்ளி தாளாளர் ராணிஷிபா தலைமை வகிக்க, இயக்குனர் ரோஸிபாலஸ் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற சாமுவேல் ஆர்வி சிங் பேசுகையில், ‘அனைவரிடத்திலும் அன்பு பகிர்தலே கிறிஸ்துமஸ் பண்டிகையின் நோக்கம். பள்ளி பருவத்தில் மாணவர்களாகிய நீங்கள் கஷ்டப்பட்டு படிப்பதுடன், நல்லொழுக்கத்துடன் வாழ்ந்தால் வாழ்க்கையின் வெற்றி படிக்கட்டில் எளிதாக ஏற முடியும், நீங்கள் எந்த நல்லதை பெற்றீர்களோ அதை இந்த சமுதாயத்திற்கும் கிடைக்கும்படி செய்ய வேண்டும்’ என்றார். தொடர்ந்து மாணவ, மாணவிகளின் குழு நடனம், பாடல்கள் போன்ற கலைநிகழ்ச்சிகள் நடந்தன. கிறிஸ்துமஸ் பிறப்பில் வரும் ஏசு, மரியன்னை, சூசை போன்றவர்கள் போன்று மாணவியர் உடையணிந்து கிறிஸ்து பிறப்பின் தத்ரூபத்தை கொண்டு வந்தனர். இதில் தலைமையாசிரியை ஷிபா மற்றும் ஆசிரிய- ஆசிரியைகள், மாணவ- மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Christmas Celebration ,Natham Vembarali School ,
× RELATED வேளாங்கண்ணியில் சிறப்பு திருப்பலி...