அய்யம்பாளையத்தில் வீட்டில் பதுக்கிய 1 கிலோ கஞ்சா பறிமுதல் மூதாட்டி கைது

பட்டிவீரன்பட்டி, டிச. 13: அய்யம்பாளையத்தில் வீட்டில் பதுக்கிய 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் விற்பனையில் ஈடுபட்ட மூதாட்டியை கைது செய்தனர். பட்டிவீரன்பட்டி அருகே அய்யம்பாளையம் குட்டிகரடு பகுதியை சேர்ந்த பெருமாள் மனைவி பெருமாயி (65). இவர் வீட்டில் வைத்து கஞ்சா விற்பதாக பட்டிவீரன்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தியதில் வீட்டில் கஞ்சாவை பதுக்கி விற்றது தெரிந்தது.  இதையடுத்து போலீசார் பெருமாயியை கைது செய்து, அங்கிருந்த 1 கிலோ 100 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.

Related Stories: