×

பழநி கோயில் பாதுகாப்பு தன்மை மத்திய அதிவிரைவுபடை ஆய்வு

பழநி, டிச. 13: பழநி கோயில் பாதுகாப்பு தன்மை குறித்து மத்திய அதிவிரைவுப்படையினர் ஆய்வு மேற்கொண்டனர். நாடு முழுவதும் பொதுமக்கள் அதிகளவில் கூடுதல் நகரங்களின் பாதுகாப்பு தன்மை குறித்து மத்திய அதிவிரைப்படையினர் ஆய்வு செய்வது வழக்கம். இதன்படி நேற்று தமிழகத்தில் பக்தர்கள் வரும் நகரங்களின் முக்கியமானதான பழநி நகருக்கு வந்தனர். பழநி பகுதியில் பிரச்னைக்குரிய இடங்கள், ஏற்கனவே அதிகளவில் பிரச்னை நடந்த இடங்கள், இயற்கை சேதம் அதிகளவு நடந்த இடங்கள், அந்த இடங்களுக்கு விரைந்து செல்வதற்கான வழித்தடங்கள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. தொடர்ந்து மத்திய அதிவிரைவுப்படையின் ஆர்.ஏ.எப் பிரிவு ஏடிஎஸ்பி நிர்மல் தலைமையிலான அதிரடிப்படையினர் பழநி டிஎஸ்பி விவேகானந்தன் தலைமையிலான போலீசாருடன் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

Tags :
× RELATED இன்று வாக்குச்சாவடிக்கு சென்று...