×

4 நாட்களில் 563 பேர் வேட்புமனு தாக்கல்

திருவாரூர், டிச.13: திருவாரூர் மாவட்டத்தில் முதல்கட்டமாக திருவாரூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, கோட்டூர் மற்றும் மன்னார்குடி ஆகிய 5 ஒன்றியங்களுக்கும், 2ம் கட்டமாக 30ம் தேதி நீடாமங்கலம், வலங்கைமான், குடவாசல், நன்னிலம் மற்றும் கொரடாச்சேரி ஆகிய 5 ஒன்றியங்களுக்கும் தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் இதற்கான வேட்பு மனுத்தாக்கல் என்பது கடந்த 9ம் தேதி துவங்கியதையடுத்து மாவட்டத்தில் மொத்தமுள்ள 430 ஊராட்சிகளுக்கான 3 ஆயிரத்து 804 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த தேர்தல் நடக்குமா என்பது சந்தேகமாக இருந்து வந்த நிலையில் நேற்று முன்தினம் உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணைக்கு பின்னர் தேர்தல் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இந்நிலையில் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 3வது நாள் வரையில் மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிக்கு ஒருவரும், ஒன்றிய குழு கவுன்சிலர் பதவிக்கு 8 பேரும், ஊராட்சி தலைவர் பதவிக்கு 112 பேரும், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 374 பேர்கள் என மொத்தம் 3,804 பதவிகளுக்கு 3 நாட்களில் மொத்தம் 580 பேர்கள் மட்டுமே மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்நிலையில் நேற்று 4வது நாளாக நடைபெற்ற மனு தாக்கலின் போது கோட்டூர் ஊராட்சி ஒன்றியத்தில் மாவட்ட ஊராட்சி தலைவருக்கு 2 பேர்கள் மற்றும் ஒன்றிய குழு கவுன்சிலர் பதவிக்கு மன்னார்குடி ஒன்றியத்தில் 4 பேர்களும், குடவாசலில் 3 பேர்கள் மற்றும் திருவாரூர், கொரடாச்சேரி, கோட்டூர் மற்றும் முத்துப்பேட்டை ஆகிய ஒன்றியங்களில் தலா ஒருவர் என 11 பேர்களும் மற்றும் ஊராட்சி தலைவர் பதவிக்கு 96 பேர்களும், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 454 பேர்களும் என மொத்தம் 563 பேர்கள் என மொத்தம் 4 நாட்களில் ஆயிரத்து 58 பேர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர்.

Tags :
× RELATED வாக்களிக்க உற்சாகத்துடன் வந்த மாற்று திறனாளிகள், மூத்தோர்