×

புதுக்கோட்டை மாவட்டத்தில் மழைநீர் ஒழுகும் பேருந்து நிறுத்தங்களை சீரமைக்க வேண்டும்

புதுக்கோட்டை, டிச.13: புதுக்கோட்டை மாவட்டத்தில் மழைக்கு ஒழுகும் பேருந்து நிறுத்தத்தை சீரமைக்க வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து திருச்சி செல்லும் சாலையில் அரசு மகளிர் கலை கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் புதுக்கோட்டை மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் பல்வேறு பாடப்பிரிவுகளில் படித்து வருகின்றனர். இந்த கல்லூரி மாணவிகளின் வசதிக்காக கடந்த 2008-2009ம் அரசு மகளிர் கலை கல்லூரி முன்பு பஸ் நிறுத்தம் அமைக்கப்பட்டது. இதனால் கல்லூரி மாணவிகள் இந்த பஸ் நிறுத்தத்தில் இருந்து தாங்கள் செல்ல வேண்டிய பகுதிக்கு அரசு மற்றும் தனியார் பஸ்களில் ஏறி சென்று வருகின்றனர். இந்நிலையில் தற்போது இந்த பஸ் நிறுத்தத்தின் மேற்கூறையின் ஒருபகுதி முற்றிலும் சேதமடைந்து காற்றில் பறந்து விட்டது. இதனால் தற்போது மழை பெய்தால் பஸ் நிறுத்தத்திற்குள் மழைநீர் கொட்டுகிறது. இதனால் இந்த பஸ் நிறுத்தத்தை மாணவிகள் பயன்படுத்தாமல் நிறுத்தத்தின் அருகே வெயிலில் பஸ்சுக்காக காத்திருக்கும் சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. தற்போது இதை சீரமைக்கும் பணி நடந்தது. இது போல் மாவட்டத்தில் பல பேருந்து நிறுத்தங்கள் மழைக்கு ஒழுகும் நிலையில், சேதமடைந்து உள்ளது. எனவே இது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து அரசு மகளிர் கலை கல்லூரி முன்பு உள்ள சேதமடைந்த பஸ் நிறுத்தத்தை உடடியாக சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : bus stops ,Pudukkottai district ,
× RELATED மதுபிரியர்கள் மகிழ்ச்சி...