×

859 பேர் வேட்புமனு தாக்கல்

புதுக்கோட்டை, டிச.13:புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியங்களுக்கு 2 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் முதல் கட்டமாக அன்னவாசல், விராலிமலை, குன்றாண்டார்கோவில், புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை, கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியங்களுக்கும், 2-வது கட்டமாக அறந்தாங்கி, அரிமளம், ஆவுடையார்கோவில், பொன்னமராவதி, மணமேல்குடி, திருமயம் மற்றும் திருவரங்குளம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கும் நடைபெற உள்ளது. இதையடுத்து உள்ளாட்சி தேர்தல்களுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 9ம் தேதி தொடங்கியது. குறிப்பாக நேற்று புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 217 பேரும், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 607 பேரும், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு 33 பேரும், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் பதவிக்கு 2 பேரும் என மொத்தம் 859 பேர் வேட்புமனு தாக்கல் செய்து உள்ளனர். இதுவரை புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் ஆயிரத்து 646 பேர் வேட்புமனு தாக்கல் செய்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
× RELATED அறிவொளி கருப்பையா தகவல் கட்சியினர் வீதிவீதியாக வாக்குசேகரிப்பு