அரியலூர், டிச. 13: உள்ளாட்சி தேர்தலையொட்டி வரும் 14ம் தேதியும் வேட்புமனு தாக்கல் செய்யலாம். உள்ளாட்சி தேர்தலையொட்டி அரியலூர் மாவட்டத்தில் கடந்த 9ம் தேதி முதல் வேட்புமனுக்கள் பெறப்பட்டு வருகிறது. நாளை (14ம் தேதி) சனிக்கிழமையன்றும் வேட்புமனு தாக்கல் பெறப்படுகிறது. எனவே அனைத்து ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான தேர்தல் நடத்தும் அலுவலர்களும், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களும் வேட்பு மனுக்களை பெறுவதற்காக அவர்களது அலுவலகத்தில் குறிப்பிட்ட நாளில் உரிய நேரத்தில் இருந்து பெற்று கொள்ள வேண்டும். எனவே நாளை வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுவை சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் அளிக்கலாம். இவ்வாறு அரியலூர் கலெக்டர் ரத்னா தெரிவித்துள்ளார்.