×

உள்ளாட்சி தேர்தலுக்காக 4 நாளில் அரியலூர் மாவட்டத்தில் 1,007 பேர் வேட்புமனு தாக்கல்

அரியலூர், டிச. 13: உள்ளாட்சி தேர்தலையொட்டி அரியலூர் மாவட்டத்தில் கடந்த 4 நாட்களில் 1,007 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். உள்ளாட்சி தேர்தலையொட்டி அரியலூர் மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சி அலுவலகம், 6 ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் 201 கிராம ஊராட்சி மன்ற அலுவலகங்களில் நேற்று 4வது நாளாக வேட்பு மனு தாக்கல் நடந்தது. கடந்த 3 நாட்களில் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 4 பேர், கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு 154 பேர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 485 பேர் என மொத்தம் 643 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர். நேற்று ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 9 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு 54 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர். கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 301 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். எனவே மொத்தத்தில் 1,007 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இவ்வாறு அரியலூர் கலெக்டர் ரத்னா தெரிவித்துள்ளார்.

Tags : Ariyalur district ,election ,
× RELATED அரியலூர் மாவட்டம் செந்துறையில் 100...