×

கூடுதல் பேருந்து இயக்க வலியுறுத்தல்

பெரம்பலூர்,டிச.13: பெரம்பலூரில், மக்கள் சக் தி இயக்கத்தின் உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூ ட்டத்துக்கு, மக்கள்சக்தி இயக்கத்தின் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் சிவக்குமார் தலைமை வகித்தார். கூட்டத்தில், அரசு மற்றும் தனியார் வங்கிகளில் சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் பொது மக்களுக்கு, அபராதம் விதிக்கும் வகையில் குறைந்த பட்ச இருப்பு தொகை, எஸ்எம்எஸ் கட்ட ணம், ஏ.டி.எம் கட்டணம் ஆகியவற்றால் ஏழை, எளியோர் கடுமையாக பாதிப்படைந்து வருவதை கருத்தில் கொண்டு, அபராதம் வசூலிப்பதை நிறுத்த வேண்டும். குரும்பலூரில் உள்ள அரசு கல்லூரிக்கு சென்று வரும் மாணவ, மாணவிகளுக்காக இயக்கப்பட்டு, தற்போது நிறுத்தப்பட்ட டவுன் பஸ்சை, மீண்டும் அதே வழத்தடங்களில் இயக்க மாவட்ட நிர்வாகம் அரசு போக்குவரத்துக்கழகத்திற்கு உத்தரவிட வேண்டும். மாணவிகளின் நலன்களை கருதி கூடுதல் பஸ் வசதிகளை ஏற்படுத்தித் தரவேண்டும் என்பன உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் கிராமம்தத்தெடுப்பு, கிராம விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளுதல், இயற்கை விவசாயத்தை முன்னெடுத்தல், பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபடுதல், திறந்த வெளியில் மலம் கழித்தல் தொடர்பான, சுகாதாரம் தொடர்பான விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொள்ளுதல் குறித்து பேசப்பட்டது.

Tags :
× RELATED பெண்ணை தாக்கி மிரட்டிய இருவர் கைது