×

நஞ்சை புஞ்சை விவசாயிகள் சங்கத் தலைவர் மனு தாக்கல்

கொள்ளிடம், டிச.13: கொள்ளிடம் அருகே வேட்டங்குடி ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு விவசாயிகள் சார்பில் நஞ்சை புஞ்சை விவசாயிகள் சங்கத் தலைவர் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். கொள்ளிடம் அருகே உள்ள வேட்டங்குடி ஊராட்சியின் முன்னாள் ஊராட்சி மன்றத் துணைத் தலைவரும், கொள்ளிடம் வட்டார நஞ்சை புஞ்சை விவசாயிகள் சங்கத் தலைவருமான வில்வநாதன் என்பவர், வேட்டங்குடி ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு நேற்று நூற்றுக்கணக்கான விவசாயிகளுடன் வந்து உதவித் தேர்தல் அலுவலர் பிரஸ்நேவிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். பின்னர் அவர் கூறுகையில், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் விவசாயிகள் சங்க கூட்டமைப்பு சார்பில் மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டேன். தற்பொழுது ஊராட்சி மன்றத் தலைவருக்கு வேட்பு மனு தாக்கல் செய்துள்ளேன். விவசாயிகளின் நலனுக்கு அரசு உரிய நன்மைகளை செய்ய வலியுறுத்தி தொடர்ந்து போராட்டம் நடத்துவேன் என்றார்.

Tags : gourd farmers ,
× RELATED நாகப்பட்டினம் மாவட்டத்தில் இன்று 3...