×

குழந்தை உடல்நலம் பாதிப்பு விவசாயி விஷம் குடித்து தற்கொலை

வேதாரண்யம், டிச.13: வேதாரண்யத்தில் குழந்தையின் உடல்நலம் பாதிக்கப்பட்டதால் மனமுடைந்த விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா அண்ணாப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் தேவசகாயம். இவரது மகன் கோவிந்தன் (35). விவசாயி. இவர் எலக்ட்ரிஷியன் வேலையும் தற்காலிகமாக செய்து வந்தார். இவருக்கு திவ்யா என்ற மனைவியும், இரண்டரை வயதில் ஆண் குழந்தையும் உள்ளனர். குழந்தைக்கு உடல்நலம் சரியில்லாமல் அடிக்கடி வெளியூர் கொண்டு சென்று சிகிச்சை அளித்தும், பலன் இல்லாததால் மனைவி குழந்தையை தூக்கிகொண்டு வெளியூர் சென்றுள்ளார். இந்நிலையில் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாததாலும், குடும்பத்தை கவனிக்க ஆள் இல்லாததால் மனமுடைந்த கோவிந்தன் நேற்று வீட்டில் விஷம் குடித்தார்.உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கோவிந்தன் உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் வாய்மேடு இன்ஸ்பெக்டர் சந்தானமேரி வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.

Tags : suicide ,
× RELATED தெலங்கானாவில் மேலும் 2 விவசாயிகள் தற்கொலை