×

கஞ்சா விற்ற தந்தை, மகன் கைது

திருப்பூர், டிச.13: திருப்பூர் திருமுருகன்பூண்டி போலீசார் ரோந்து சென்றபோது சமத்துவபுரம் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த இருவரை பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள் திருப்பூர் பாரதி நகர் சமத்துவபுரம் பகுதியை சேர்ந்த செல்வராஜ் (53) மற்றும் அவரது மகன் சக்திவேல் (23) என்பது தெரிவந்தது. மேலும் அவர்கள் அந்த பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார் விற்பனைக்காக வைத்திருந்த 2 கிலோ 600 கிராம் கஞ்சா மற்றும் ரூ.1540 பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Tags :
× RELATED காங்கயம் அருகே சாலையோரம் புதரில் திடீர் தீ