ஊட்டி, டிச.13: நீலகிரி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட இது வரை 163 பேர் வேட்புமனுதாக்கல் செய்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் 6 மாவட்ட ஊராட்சி வார்டுகள், 59 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 35 ஊராட்சி தலைவர்கள், 393 ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தல் வரும் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 9ம் தேதி துவங்கிய நிலையில், இதுவரை ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதிவிகளுக்கு 5 பேரும், கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு 12 ேபரும், 146 இடங்களில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கும் வேட்புமனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 163 பதவிகளுக்கு இதுவரை வேட்புமனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிக்கு இதுவரை யாரும் வேட்புமனுதாக்கல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.