×

மாநகராட்சி பகுதிகளில் பூங்காக்கள் திறப்பு

ஈரோடு, டிச. 13: ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் பல்வேறு திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, ஈரோடு மேற்கு தொகுதிக்குட்பட்ட காசிபாளையம் லட்சுமி கார்டன் பகுதியில் 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான திறப்பு விழா நிகழ்ச்சி நேற்று நடந்தது.

இந்த நிகழ்ச்சிக்கு மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் தலைமை தாங்கினார். இதில், சிறப்பு அழைப்பாளர்களாக ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.தென்னரசு, மேற்கு தொகுதி எம்.எல்.ஏ.ராமலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டு புதிய பூங்காவினை திறந்து வைத்தனர்.
இதைத்தொடர்ந்து, முத்தம்பாளையம் பகுதி 2ல் 75 லட்சம் ரூபாய் மதிப்பிலான பூங்கா, கொங்குநகர், தீரன்நகர் உள்ளிட்ட பகுதிகளில் புதிதாக கட்டப்பட்ட பூங்காக்களையும் திறந்து வைத்தனர். இந்நிகழ்ச்சியில் உதவி ஆணையர்கள் அசோக்குமார், விஜயா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Opening ,
× RELATED திருச்செந்தூரில் தண்ணீர் பந்தல் திறப்பு